136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராகுல் காந்தி உதகையில் இருந்து சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார்.
ராகுல் காந்தி வருகையால் கோவை, உதகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோடி சமூகம் குறித்த அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனையால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.
இதையடுத்து இந்த தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
இந்நிலையில் தனது தொகுதியான வயநாட்டை பார்வையிடுவதற்காக இன்றும், நாளையும் ராகுல் காந்தியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..