இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியினர் இன்று செவ்வாய்க்கிழமை ( 22 ) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியினருடன் 3 போட்டிகள் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் ஒருநாள் தொடரிலும் 2 போட்டிகள் கொண்ட 04 நாட்கள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளனர்.
இந்த போட்டிகள் அனைத்தும் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பயிற்சிப் போட்டி ஒன்று கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அணியை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் குழு ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..