01,Jun 2025 (Sun)
  
CH

அதானி குழுமம் வழக்குகள் ரத்துசெய்யப்படுமா? டிரம்பிடம் சமாதான பேச்சுவார்த்தை

இந்திய பணக்காரர்களில் முன்னிலை வகிப்பவர் கெளதம் அதானி. விமான நிலையம், துறைமுகம் என பல்வேறு துறைகளில் அதானி குழுமம் இயங்கி வருகிறது. இச்சுழலில் கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் மீது லஞ்ச புகார் எழுந்தது. 


இந்த நிலையில், கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட லஞ்ச புகார் தொடர்பான வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என அதானி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். இந்த செய்தியை ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. 


அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடன் மோசடி மற்றும் லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சூரிய ஒளி மின்சாரத்தை வாங்கும் வகையில் விநியோகம் ஒப்பந்தங்களை பெறுவதற்காக கெளதம் அதானி நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு ரூ. 2100 கோடி வரையில் லஞ்சம் கொடுத்தாக கூறப்படுகிறது. இது 2020 முதல் 2024 காலகட்டத்தில் நடந்துள்ளது.


இதனை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜாராகவும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஆதானி குழுமம் மறுத்து வருகிறது. இந்த நிலையில்தான், அதானி குழும பிரதிநிதிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என அந்த பிரதிநிதிகள் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த கோரிக்கையை பரிசீலித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதானி குழுமம் மீதுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வாப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 




அதானி குழுமம் வழக்குகள் ரத்துசெய்யப்படுமா? டிரம்பிடம் சமாதான பேச்சுவார்த்தை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு