சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளர் பதவிகளைத் திருவுளச்சீட்டின் மூலம் தமிழ்த் தேசியப் பேரவை தமதாக்கியுள்ளது.
நகர சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது தமிழரசுக் கட்சியின் தவிசாளர் வேட்பாளர் கயிலாயபிள்ளை, தமிழரசுக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுடைய ஆதரவுடன். 7வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அதேநேரம் தமிழ்த்தேசிய பேரவையின் தவிசாளர் வேட்பாளர் சிறிபிரகாஸுக்கும் 7 வாக்குகள் கிடைத்திருந்தன.
இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், திருவுளச் சீட்டு ஊடாக, தமிழ்த்தேசிய பேரவையின் வேட்பாளர் வ.சிறிபிரகாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
உபதவிசாளர் தெரிவிலும் தமிழரசு கட்சியின் பாலமயூரனும், தமிழ்த்தேசிய பேரவையின் கிஷோரும் சம வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், திருவுளச்சீட்டு மூலம் தமிழ்த்தேசிய பேரவையின் உறுப்பினர் கிஷோர் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி நடுநிலைமை வகித்திருந்தது.
தமிழ்த் தேசிய பேரவையின் சார்பாக உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சாவகச்சேரி நகரசபைக்கு 7 பேர் தெரிவானார்,
இந்தநிலையில், தமிழ்த் தேசிய பேரவையினால் பிரேரிக்கப்பட்ட பெண் அங்கத்தவர் ஒருவருக்கு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்றைய தெரிவுகள் இடம்பெற்றன.
0 Comments
No Comments Here ..