96, பேட்ட படங்களுக்குப்பிறகு ராங்கி, பரமபத விளையாட்டு, பொன்னியின் செல்வன், சுகர் என பல படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. இதில் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கியுள்ள ராங்கி படப்பிடிப்பு பிப்ரவரியோடு முடிவடைகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை வசனம் எழுதியிருக்கிறார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் குளிர் உள்ளதாம். இருப்பினும் அதிகாலை படப்பிடிப்பு என்றால்கூட எதையும் பொருட்படுத்தாமல் படப்பிடிபபுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறாராம் திரிஷா. அதோடு உஸ்பெகிஸ்தானில் தான் எடுத்துக்கொண்ட செல்பிக்களையும் வெளியிட்டுள்ளார் திரிஷா.













0 Comments
No Comments Here ..