உலகளவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,698ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,000இற்க்கும் அதிகமாக உள்ளது.
சீனாவை தவிர்த்து தென் கொரியாவில் 890இற்க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர்.
குவைத், பஹ்ரைன், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று (திங்கட்கிழமை) பதிவானது.
குவைத்தில் மூன்று பேரும், ஓமானில் இரண்டு பேரும் பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகியவை ஈரானுடனான எல்லைகளை மூடிவிட்டன.
ஈரானில் 61பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு, 12பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..