14,May 2024 (Tue)
  
CH
சினிமா

சின்னத்திரை படப்பிடிப்புகளைத் துவங்க தமிழக அரசு அனுமதி

கொரோனா தொற்றின் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சின்னத் திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஊரகப் பகுதிகளைத் தவிர பிற இடங்களில் உள்ளரங்கப் படப்பிடிப்பை மட்டுமேநடத்த வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்த்த பிற இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அரங்குகளுக்குள்தான் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாதுஎன்றும் கூறப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்புகளை நடத்தலாம்.

இந்தப் படப்பிடிப்புகளைப் பார்க்க பார்வையாளர்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. படப்பிடிப்பிற்குப் பயன்படுத்தப்படும் வீடு, கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

நடிகர் - நடிகைகள் தவிர்த்த பிறர் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். படப்பிடிப்பின் இடைவெளியில், நடிகர் - நடிகைகளும் முகக் கவசம் அணிய வேண்டும். சளி, இருமல் போன்ற உடல்நலக் குறைவு உள்ளவர்களை படப்பிடிப்புத் தளத்திற்குள்அனுமதிக்கக்கூடாது. உடனடியாக மருத்துவ சோதனைக்கு அனுப்ப வேண்டும்.

படப்பிடிப்பில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும் பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்த வேண்டும்.

விதிமுறைகள் பின்பற்றப்படுவதை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.




சின்னத்திரை படப்பிடிப்புகளைத் துவங்க தமிழக அரசு அனுமதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு