02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.34 மணியளவில் சக்திவாய்ந்த ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

ஏற்கனவே, நேற்று இரவு 7.18 மணிக்கு சீனாவின் டாலிக் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு