29,Apr 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

மூன்று அமாவாசை விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பயன்கள்

அமாவாசை தோறும் இந்த திருக்கோவிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், தோஷங்கள், பில்லி, சூன்யம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் தான் அமாவாசை. மேலும் பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.

அமாவாசையில் விரதம் இருந்து அங்காளம்மன் திருக்கோவிலில் ஊஞ்சலில் வைக்கப்பட்டு இருக்கும் அம்மனிடம் தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் அதன்படி வேண்டியது நிறைவேறும்.

ஆன்ம பிணிகளாக பில்லி, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம் போன்றவை விலக தொடர்ந்து மூன்று அமாவாசைக்கு விரதம் இருந்து வருகை தந்தால் என்பது விலகும் என்பது உண்மை.

ஒரு எலுமிச்சை பழத்தை நான்காக வெட்டி அதில் கற்பூரம் ஏற்றி தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியை கழித்து செல்வது இந்த கோவிலில் வழக்கம்.

பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





மூன்று அமாவாசை விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பயன்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு