03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் என ஞானசார தேரர் எச்சரித்திருந்தாரா?

நாட்டில் மீண்டும் மத அடிப்படைவாதிகளின் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என தாம் எச்சரித்ததாக கூறும் பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை தொடர்பில் விரிவானதும் முறையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கத்தோலிக்கத் திருச்சபை பொலிஸ்மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கத்தோலிக்க திருச்சபையின் தொடர்பாடல் பணிப்பாளர் சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.


கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஞானசார தேரர், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் 2017ஆம் ஆண்டு தாம் எச்சரித்திருந்ததாக அவர் தற்போது தெரிவித்து வருகின்றார்.


எனினும் இதை தாம் முற்றாக நிராகரிப்பதாக சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளார் நேற்று தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதொரு தகவலையோ எச்சரிக்கையையோ ஞானசார தேரர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் அப்போது தெரிவித்திருக்கவில்லை என்பதை சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளார் குறிப்பிட்டார். 





இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் என ஞானசார தேரர் எச்சரித்திருந்தாரா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு