05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

நாளை நடக்கப்போவது என்ன? இருளில் மூழ்குமா இலங்கை!

மின்சார விநியோகத்தை நிறுத்தி இதன் மூலம் பொது மக்கள் வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

அதேபோல் தாம் போராட்டத்தில் ஈடுபடும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள், தங்களது தொழிற்சங்கத்தினர் இல்லாவிட்டால் மின்சார விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியாதென என்றும் தெரிவித்தார்.

தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னிலையத்தின் 40% பங்குகளை விற்பது தொடர்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனமான நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி இன்க் உடனான ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தவும் நாளை போராட்டம் நடத்தப்படும் என்றார்.







நாளை நடக்கப்போவது என்ன? இருளில் மூழ்குமா இலங்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு