27,Apr 2024 (Sat)
  
CH
கவிதைகள்

அனுபவித்தலே வாழ்வு


'பிறப்பின் வருவது

யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்

இறப்பின் பின்னது ஏதெனக்

கேட்டேன்

இறந்து பாரென இறைவன்

பணித்தான்

அனுபவித்தேதான் அறிவது

வாழ்வெனில்

ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்

ஆண்டவன் சற்று அருகு நெருங்கி

அனுபவம் என்பதே நான்தான் என்றான்'


என்று கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் இங்கு நினைவு கூரத்தக்கன.

வாழ்க்கை என்பது இறைவனால் எழுதப்பட்ட கவிதை. அதற்கு நல்ல ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு ஆனந்தமாக வாழுங்கள். விபரீதமாக அர்த்தம் சொல்லி விரக்தியாகி ஸ்தம்பித்து விடாதீர்கள். சங்கீதம் பாடிச்செல்லும் ஓடையை போல உங்கள் வாழ்வும் எப்போதும் உயிர்ப்புடன் உள்ளதாக இருக்கட்டும். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!

சலிப்பின்றி வாழுங்கள்! : வாழ்க்கையை நரகமாக செய்வதற்கு சலிப்பு ஒன்று போதும். இயற்கை சலிப்படைந்து ஒரே ஒரு நாள் தன் இயக்கத்தை நிறுத்தினால் இவ்வுலகம் என்னவாகும்?

எனவே மனம் சலிப்பு எனும் சரிவில் உங்களை வீழ்த்திவிடாமல் இருக்க அதன் இறகுகளை விரித்து உதறுங்கள். வானத்தில் வட்டமிடுங்கள். இனி உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!

அழகுணர்ச்சியோடு செயல்படுங்கள்! : எந்த செயலையும் அழகுணர்ச்சியுடன் அனுபவித்து செய்யும்போது அது கலையாகிறது. எப்போதும் பரபரப்போடும், படபடப்போடும் பறந்து கொண்டிருப்பவர்களால் வாழ்க்கை ஏட்டின் இன்பப் பக்கங்களை புரட்ட முடியாமலேயே போய்விடும். எனவே எப்போதும் அழகுணர்ச்சியோடு இருங்கள்; எதிலும் அழகுத்தன்மை மிளிருமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

வாழும் கலையின் ரகசியம் : வாழ்க்கை என்பது பரந்த வானம் போன்றது. அதில் சுட்டெரிக்கும் சூரியன் வரலாம். குளிர்ச்சி தரும் சந்திரன் வரலாம். இரண்டின் வரவையும் ஏற்றுக்கொண்டு பயன்பெறுங்கள்.எனவே வாழ்வில் எதையும் ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள்.




அனுபவித்தலே வாழ்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு