29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட ஓவர்களை வீசி முடிக்கத் தவறிய அணிகளுக்கு அபராதம்

லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட ஓவர்களை வீசி முடிக்கத் தவறிய இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் கணிசமான தொகை அபாராதம் விதிக்கப்பட்டது.


மந்த கதி ஓவர் விகிதத்திற்காக இந்தியாவுக்கு 100 சதவீதமும், அவுஸ்திரேலியாவுக்கு 80 சதவீதமும் போட்டி கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) திங்கட்கிழமை (12) அறிவித்தது.


அவுஸ்திரேலியாவுடனான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (11) நிறைவடைந்ததுடன் அப் போட்டியில் இந்தியா 209 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.


அப் போட்டியில் தனது பிடி சர்ச்சைக்குரிய முறையில் எடுக்கப்பட்டதாக இந்திய துடுப்பாட்ட வீரர் ஷுப்மான் கில், சமூக ஊடகத்தில் விமர்சித்ததற்காக அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் குறைக்கப்பட்டது.


நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அவுஸ்திரேலியா 4 ஓவர்கள் குறைவாக வீசியிருந்ததுடன் இந்தியா 5 ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது என ஐசிசி குறிப்பிட்டது.




நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட ஓவர்களை வீசி முடிக்கத் தவறிய அணிகளுக்கு அபராதம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு