29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

அமெரிக்கா உக்ரைனுக்கு கொத்து குண்டுகள் வழங்க ஆலோசித்து வருவதாக தகவல்

உக்ரைனுக்கு புதிதாக ஆயுத தொகுப்பு ஒன்றை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், அந்த தொகுப்பில் விவாதத்துக்குரிய கொத்து குண்டுகளும் இடம்பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான போரின் போது ரஷ்யாவும் உக்ரைனும் கொத்து குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்புடைய கொத்து குண்டுகளால் பொதுமக்கள் பல ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.



இரண்டாம் உலகப் போரில் முதன்முதலில் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 2008 ல் கிளஸ்டர் குண்டுகளுக்கு எதிரான மாநாட்டின் கீழ் 120 க்கும் மேற்பட்ட நாடுகள் கொத்து குண்டு பயன்பாட்டை தடை செய்தன. ஆனால் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா நாடுகள் குறித்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தன. தற்போது உக்ரைன் பதில் தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில், கொத்து குண்டுகளை அளிக்குமாறு அமெரிக்காவை உக்ரைன் கட்டாயப்படுத்தி வருகிறது.





அமெரிக்கா உக்ரைனுக்கு கொத்து குண்டுகள் வழங்க ஆலோசித்து வருவதாக தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு