தென்னாபிரிக்காவில் காணப்படும் ஒமிக்ரான் வைரஸ் எனப்படும் கொவிட் வைரஸின் அண்மைய மாறுபாட்டில் சுமார் 30 பிறழ்வுகள் இருப்பதாக டொக்டர் சந்திமா ஜீவந்தர(jeewandara) தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மக்கள் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அவதானமாக இருக்க வேண்டும் எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகள் வெற்றியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் போதுமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..