02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

வைத்¬தி¬ய¬சா¬லை¬யொன்றில் 7 சிசுக்¬களை கொலை செய்த தாதி ஒருவர் குற்றவாளி என தீர்ப்பு

வைத்­தி­ய­சா­லை­யொன்றில் 7 சிசுக்­களை வேண்­டு­மென்றே கொலை செய்­தமை தொடர்­பான வழக்கில் பிரித்­தா­னிய தாதி ஒருவர் குற்­ற­வாளி என இங்­கி­லாந்தின் மென்­செஸ்டர் கிறவுண் நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.33 வய­தான லூசி லெட்பி எனும் இப்பெண், 2015 ஜூன் மற்றும் ஒக்­டோபர் மாதங்­க­ளுக்கு இடையில் 5 குழந்­தை­க­ளையும் 2016 ஜூன் மாதம் மேலும் இரு குழந்­தை­க­ளையும் பல்­வேறு முறை­களில் லூசி லெட்பி கொலை செய்தார் எனவும் மேலும் 6 குழந்­தை­களை கொல்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டார் எனவும் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன. 


ஊசி மூலம் காற்றை செலுத்­தியும், பல­வந்­த­மாக பால் கொடுத்தும், இன்­சுலின் மூலம் நஞ்­சூட்­டியும் வேண்­டு­மென்றே அவர் குழந்­தை­களை கொலை செய்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இங்­கி­லாந்தின் செஸ்டர் நக­ரி­லுள்ள, கவுன்டஸ் செஸ்டர் வைத்­தி­ய­சா­லையில் 2011ஆம் ஆண்டு முதல் தாதி­யாக லூசி லெட்பி பணி­யாற்­றினார்.

2015, 2016 காலப்­ப­கு­தியில் வழக்­குத்­துக்கு மாறான எண்­ணிக்­கையில் சிசுக்கள் உயி­ரி­ழப்­பது மற்றும் உடல்­நலக் குறைவால் பாதிக்­கப்­ப­டு­வது போன்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. 


2017 ஆம் ஆண்டில் பொலி­ஸா­ர் விசா­ர­ணையைத் தொடங்­கினர். மேற்­படி சம்­ப­வங்கள் இடம்­பெற்ற நாட்­களில் குறித்த வைத்­தி­ய­சாலை அறையில் தாதி லூசி லெட்பி பணியில் இருந்தமை தெரி­ய­வந்­தது. 

2018 ஆம் ஆண்டு அவரை பொலிஸார் கைது செய்­தனர். கடந்த ஒக்­டோபர் மாதம் நீதி­மன்ற விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின. 

இந்­திய வம்­சா­வளி மருத்­துவர் ரவி ஜெயராம் இது தொடர்­பாக கூறு­கையில், குழந்­தை­களின் உடலில் ஒட்சின் குறையும் போது, லூசி லெட்பி, எதையும் செய்­யா­மல், குழந்­தை­களை இறக்­க­விட்டார் என்­பதை என்னால் உறு­தி­யாகச் சொல்ல முடியும்' என்றார்.தன்­மீ­தான குற்­றச்­சாட்­டு­களை லூசி லெட்பி நிரா­க­ரித்தார். எனினும், 7 சிசுக்­களை கொன்­றமை, 6 சிசுக்­களைக் கொல்ல முயன்­றமை சந்­தே­கத்­துக்கு இட­­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் தெரி­வித்­துள்­ளது. 


நவீன பிரிட்டனின் மிக மோசமான சிறுவர் தொடர் கொலையாளி என லூசி லெட்பி வர்ணிக்கப்படுகிறார்.லூசி லெட்பிக்கான தண்டனை நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என நீதி­மன்றம் தெரிவித்துள்ளது.





வைத்¬தி¬ய¬சா¬லை¬யொன்றில் 7 சிசுக்¬களை கொலை செய்த தாதி ஒருவர் குற்றவாளி என தீர்ப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு