தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேஸிலில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 11,896பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 667பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 79,361ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,511ஆக உயர்வடைந்துள்ளது.
இதுதவிர, 66,653பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் 8,318பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
குறிப்பாக 51,370பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிரேஸிலில் இறுக்கம் நிரம்பிய சுற்றுப்புறங்களில் அதிகமான மக்கள் தொகை இருப்பதால், இன்னமும் பலர் பதிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..