20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

மட்டக்களப்பில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் அடித்துக் கொலை..!!

மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை வவுணதீவில் உள்ள அரசிஆலைக்கு அருகில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டசடலம் அடிகாயங்களுடன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் சார்ஜன்டான 55 வயதான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பில் பல கோணத்தில் விசாரணை இடம் பெறுவதாகவும் இந்த கொலையில் இருவர் தொடர்புபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கூறும் வவுணதீவு பொலிசார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




மட்டக்களப்பில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் அடித்துக் கொலை..!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு