கொரோனா வைரசுடன் போராடி வரும் சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக சீனப் பொலிசார், சட்டவிரோத இறைச்சி விற்பனையாளர்களை குறி வைத்து வருகிறார்கள்.சட்டவிரோதமான விலங்கு இறைச்சி விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
குவாங்சோ மாகாணத்தில் வணிக வளாகத்தை நடத்தி வந்த ஹுவாங் ரன் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.அவரது வர்த்தக நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பறவைகள், கழுகுகள், பூனைகள், அணில், நாய், ஓநாய், பாம்பு, குதிரை உட்பட 250 க்கும் மேற்பட்ட விலங்குகளின் இறைச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவர் நீண்ட காலமாக விலங்கு கடத்தல் தொழிலை நடத்தி வருகிறார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..