சுயநலத்தைத் துறந்து, சகவாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் பரவி வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் வளங்கள் சமமாகப் பகிரப்படும் மற்றும் தன்னலமற்ற ஒரு சமூகத்தை நாட்டில் உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
நபி இப்ராஹீம் தனது மகன் நபி இஸ்மாயிலை இறைவனுக்காக அர்ப்பணிக்க முன்வந்ததை நினைவுகூரும் இந்த வழக்கம், இஸ்லாம் மார்க்கத்தின் தியாக உணர்வை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகும்.
அந்த வகையில், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அன்பர்கள் ஒன்றிணைந்து, உலக அமைதிக்காக மத அனுஷ்டானங்களை நிறைவேற்றும் ஹஜ் பெருநாள், முழு உலக மக்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</div> </div>
</div>
0 Comments
No Comments Here ..