விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அமைச்சர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெள்ளிக்கிழமை மாலை 2 மணியளவில் தெரியவந்ததாகவும் இதனையடுத்து,தான் உள்ளிட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுயதனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தன்னுடைய சாரதிகள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கும் குடும்பத்தினருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..