13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

நாளை அல்லது நாளை மறுதினம் எதிர்பாராத அளவு ஒரு விலை அதிகரிப்பு ஏற்படும்! வெளியானது தகவல்

நாளை அல்லது நாளை மறுதினம் மின்சார கட்டணம் எதிர்பார்க்காத அளவு அதிகரிக்கக் கூடும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  

மின்கட்டணத்தை உயர்த்தும் யோசனையின் கீழ் இவ்வாறு மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனினும் இதனை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

நாளை அல்லது நாளை மறுதினம் அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும். 25 முதல் 50 சதவீதத்தினால் கட்டணம் அதிகரிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவில்லை.

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைப்படி, முன்னர் காணப்பட்டதை விடவும் 500 சதவீதத்தால் அதிகரிக்கும்.

மின்சாரத்தை பயன்படுத்தாது எதிர்வரும் நாட்களில் மின்குழிழ் மற்றும் மின்விசிறி என்பவற்றை பார்த்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 





நாளை அல்லது நாளை மறுதினம் எதிர்பாராத அளவு ஒரு விலை அதிகரிப்பு ஏற்படும்! வெளியானது தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு