26,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

வடக்கு கிழக்கு உட்பட 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, 21 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுக்கான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

எனவே, பொதுமக்கள் மழை மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, பொலனறுவை, குருநாகல், மாத்தளை, மட்டக்களப்பு, கேகாலை, கண்டி, கம்பஹா, நுவரெலியா, கொழும்பு, பதுளை, களுத்துறை, இரத்தினபுரி, மொனராகலை, ஜி. மற்றும் மாத்தறை, ஆகிய 21 மாவட்டங்களுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







வடக்கு கிழக்கு உட்பட 21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு