இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசிகள் தொடர்பான விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தடுப்பூசிகளில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் அதிகப்படியான உப்பு கலந்திருந்தது ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வகப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம இன்று (ஜூன் 19) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் பல உயர் அதிகாரிகள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. இந்த விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..