முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வைத்து பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட T -56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் துமிந்த திசாநாயக்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதனை நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலையில் இருந்து மே 25ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதே மாதம் 28ம் திகதி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டநிலையிலேயேநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
0 Comments
No Comments Here ..