12,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து ஒருவர் பலி

யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக இவ்விபத்து நடந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீயணைப்பு வாகனத்திற்ன் முன் பகுதி சில்லு திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் வீதியை விட்டு விலகி தோட்டத்திற்குள் பாய்ந்துள்ளது.

இச் சம்பவத்தில் தீயணைப்பு பணியில் ஈடுபடுபவர் இருவர் படுகாயமடைந்தனர். மயக்கமடைந்த நிலையில் வீதியோரமாக இருந்த ஒருவர் மற்றும் படுகாயமடைந்த மற்றவர், நோயாளிகள் காவு வண்டியின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்

யாழ் மாநகரசபையில் நவீன தீயணைப்பு வாகனமாக இது ஒன்றே பாவனையில் இருந்தது. தற்போது வாகனம் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. உடனடியாக பாவனைக்கு திரும்புவது கடினம் என மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து ஒருவர் பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு