20,Apr 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டுபட்டியை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் யானைக்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

தும்பங்கேணி திக்கோடையைச் சேர்ந்த விவசாயியான 59 வயதுடைய சீனித்தம்பி சந்திரசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 39 ஆம் கொலனியில் உள்ள வயல் பிரதேசத்தில் வேளாண்மையை யானைகளிடம் இருந்து பாதுகாக்க சில விவசாயிகள் ஒன்றிணைந்து வயல் பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் பெற்று, மின்சார வேலி அமைத்திருந்தனர்.

இந்த மின்சார வேலிப் பகுதியில் குறித்த விவசாயின் மாட்டுப்பட்டி மற்றும் விவசாயம் அமைந்திருந்த நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்து மாட்டுபட்டிக்கு சென்றிருந்த நிலையில் வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த முட்கம்பியை பிடித்து மாட்டுபட்டிக்கு செல்ல முற்பட்டபோது மின்சார வேலியின் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தினை களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொள்கின்றனர் குறிப்பிடத்தக்கது




மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு