யாழ் காவல் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரியாக P.M.C.J.B பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இதுவரை கடமையாற்றிய பிரசாத் பெர்னாண்டோ, உதவிக் காவல்துறை அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்திற்கு பணியிட மாற்றலாகியுள்ளார்.
இதனால் யாழ். காவல் நிலையப் பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாக காணப்பட்ட நிலையில், கொழும்பு போக்குவரத்து காவல்துறைப் பிரிவின் தலைமையகத்தில் பணியாற்றிய பளிகேன என்பவர் யாழ். காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..