29,Apr 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

மகிந்த தலைமையில் அலரிமாளிகையில் நள்ளிரவு வரை நீடித்த விசேட கலந்துரையாடல் -வெளியேறிய பெண் எம்.பி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும்(Mahinda Rajapaksa) அரசாங்கத்தின் மொட்டுவை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பிரதமருக்கு மேலதிகமாக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும்(Basil Rajapaksa) கலந்துகொண்டார்.

அலரிமாளிகையில் மாலை 6 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடல் நள்ளிரவு வரை நீடித்ததுடன், கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு விருந்தும் வழங்க பிரதமர் ஏற்பாடு செய்திருந்தார்.

மொட்டுவில் உள்ள சுமார் 15 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரச்சினைகளை பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும் பசில் ராஜபக்ச சுமார் 40 நிமிடங்கள் உரை நிகழ்த்தியமை மிக முக்கியமான நிகழ்வாகும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் தம்மீது குற்றம் சுமத்தினாலும் பின்வாங்கப் போவதில்லை எனவும், அனைவரும் ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்வது அவசியமானது எனவும் பசில் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்குச் செல்லும் போதும் கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் நினைவுக்கு வருவதாகவும் ஆனால் அவை அனைத்தையும் மறந்து விடுவதாகவும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

எனவே அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக முன்னோக்கி செல்ல வேண்டும் என நிதியமைச்சர் கூட்டத்தில் தெரிவித்தார். அபிவிருத்தி மாத்திரம் தேர்தலில் வெற்றியடையாது எனவும் அவ்வாறாயின் 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றிபெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பில் அமைச்சர் பதவி வழங்கப்படாமை தொடர்பில் திருமதி கீதா குமாரசிங்க(Geetha Kumarasinghe) மாத்திரம் கவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு உணவுக்கு கூட செல்லாமல் அவர் வெளியேறியமை பின்னர்தான் தெரியவந்தது.





மகிந்த தலைமையில் அலரிமாளிகையில் நள்ளிரவு வரை நீடித்த விசேட கலந்துரையாடல் -வெளியேறிய பெண் எம்.பி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு