கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
கட்டி பெருங்காயம் - சிறிதளவு
பட்ட மிளகாய்(வரமிளகாய்) - 10
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
பூண்டு - 2 (முழு பூண்டு)
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கட்டி பெருங்காயத்தை 1 மேஜைகரண்டி எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் மொறு மொறு என்று வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில் கருப்பு உளுந்தை எண்ணெய் சேர்க்காமல் குறைவான தீயில் வைத்து மொறு மொறு என்று சிறிது கலர் மாறும் வரை வறுக்கவும். இது நன்றாக வறுபட குறைந்தது 9 யிலிருந்து 10 நிமிடங்களாகும். பிறகு தட்டிற்கு மாற்றவும்.
கடலைப்பருப்புடன் 2 சொட்டு எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் வைத்து 4 நிமிடத்திற்கு பின் சிறிது கலர் மாறும் வரை வறுத்து பின்பு மற்றொரு தட்டில் கொட்டி வைக்கவும்.
மிளகாயை வெறும் வாணலியில் 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வெள்ளை எள்ளையும் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
கறிவேப்பிலையுடன் சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
எல்லா பொருட்களை தனித்தனியாக வறுத்த பின் ஒரு அகலமான ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
ஆறிய பின் மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கரகரப்பாக அரைத்த பின் அதில் தோல் உரிக்காத பூண்டு மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியை தொடர்ந்து போடாமல் சிறிது நிறுத்தி நிறுத்தி போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பின்பு ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இது 1 மாதம் வரை நல்ல வாசனையுடன் இருக்கும்.
சூப்பரான கருப்பு உளுந்து இட்லி பொடி ரெடி.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..