கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண (Prof.Tissa Vitharana)தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை விட மாற்றத்தை செய்வதற்காகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும் இதுவரை எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்நறுவை மன்னப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டமே தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு தேவை.
0 Comments
No Comments Here ..