02,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்ற 10 வயதுச் சிறுமி!!

இந்தியாவில்…



ஐயப்பசாமியை தரிசனம் செய்ய இந்தியாவுக்கு பல நாடுகளில் இருந்தும் ஐயப்ப சாமிகள் சென்றுவருகின்றனர். கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல தயாராகிவிடுவார்கள். அந்தவகையில், இலங்கையில் இருந்த் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களில் இருந்து பல்லரும் ஐயப்பசாமியை தரிசிக்க இந்தியா செல்வது வழமை.


ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது முதல் தரிசனம்

இந்த நிலையில் 10 வயதான சிறுமியொருவர் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஏழுகோன் பகுதியை சேர்ந்த அதிதி என்ற சிறுமியே இவ்வாறு தனது தந்தையுடன் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார்.


குறித்த சிறுமி பிறந்து ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்து முதன் முறையாக ஐய்யப்பனை தரிசனம் செய்துள்ளார் எனவும், அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை மற்றும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலைக்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.






50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்ற 10 வயதுச் சிறுமி!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு