31,Jul 2025 (Thu)
  
CH

செம்மணி மற்றும் சம்பூர் மனித எச்சங்கள்: சர்வதேச விசாரணைக்கு இராவண சேனை வலியுறுத்தல்

செம்மணிப் புதைகுழியில் வெளிவந்துள்ள மனித எச்சங்கள் மற்றும் அண்மையில் திருகோணமலை சம்பூர் பகுதியில் தென்பட்ட மனித எச்சங்கள் குறித்து சர்வதேச நீதிமுறை விசாரணை அவசியம் என இராவண சேனை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இன்று (ஜூலை 26, 2025) திருகோணமலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இராவண சேனைத் தலைவர் கு. செந்தூரன் கலந்துகொண்டு பேசினார். அவர், செம்மணிப் புதைகுழியில் வெளிவந்துள்ள மனித எச்சங்கள் தொடர்பாக ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தேசிய மட்டத்தில் நடக்கும் விசாரணைகள் போதுமானவை அல்ல என்றும் தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் அனைத்திற்கும் ஒரே நேர்மையான சர்வதேச விசாரணை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.


மேலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதிக் கோரிக்கைக்குத் தக்க பதில் வழங்க வேண்டும் என்றும் கு.செந்தூரன் கேட்டுக்கொண்டார்.




செம்மணி மற்றும் சம்பூர் மனித எச்சங்கள்: சர்வதேச விசாரணைக்கு இராவண சேனை வலியுறுத்தல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு