கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ந் தேதி தனது 88 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக வாடிகனில் மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்பதில் கேள்விகள் இருந்துவரும் நிலையில் புதிய போப் யாரென்பதை தெரிவு செய்வதற்கான நடைமுறைகள் முன்னெடுத்துவருகின்றனர்.
இதனிடையே ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். இந்த சூழலில், புதிய போப் தேர்வு குறித்து நகைச்சுவையாகப் பேசி இருந்தார். முன்னதாக கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த அவரது கருத்து கேட்கப்பட்டதற்கு டிரம்ப், "நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்.. அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்" என்றார்.
மேலும் போப் பிரான்சிஸுக்குப் பதிலாக யார் இருக்க வேண்டும் என்று கேட்டபோது, பதில் அளித்த டிரம்ப், நியூயார்க் வெளியே இருக்கும் ஒரு கார்டினல் எங்களிடம் இருக்கிறார், அவர் மிகவும் நல்லவர், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போப் ஆண்டவர் போல் உள்ள ஏ.ஐ. புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், டிரம்ப்பின் இந்த புகைப்படம் போப் ஆண்டவரையும்,புதிய போப் தேர்வு செய்யும் நடைமுறையையும் அவமதிப்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதனால் இந்த புகைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
0 Comments
No Comments Here ..