3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏவுகணைகளை சவுதி அரேபியாவுக்கு விற்பனை செய்வதற்கான அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்த மாதம் இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்யவுள்ள நிலையில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சவுதி அரேபியா இடம்பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டொலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா முன்னதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில்தான், அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஏவுகணைகளை சவுதி அரேபியா போர் விமானத்தில் பயன்படுத்த இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..