19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் ஆகிய அரச நிறுவனங்கனின் அதிகாரிகளை கோப் குழுவில் அடுத்த வாரம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே சுனில் ஹதுன்னெத்தி இதனைத் தெரிவித்தார். 

மார்ச் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்பட்டாலும் தமது பணிகளைத் தொடவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

அத்துடன், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி அறிக்கை தொடர்பிலும் கோப் குழு கவனம் செலுத்தவுள்ளதாக சுனில் ஹதுன்னெத்தி குறிப்பிட்டார். 

இதேவேளை, கோப் குழுவின் அங்கத்தவர்களாக உள்ள அமைச்சர்களின் கீழான நிறுவனங்கள் மீது விசாரணைகள் நடைபெறும்போது குறித்த அமைச்சர்கள் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 




ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு