கொரோனா வைரஸ் தாக்கத்துக்கான நோய் அறிகுறிகளுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு குறித்த நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பரிசோதனைகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மொனராகலை பகுதியை சேர்ந்த குறித்த யுவதி, சீனாவில் கல்வி கற்றுவந்த நிலையில், நாட்டுக்கு மீண்டும் வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்றுக்கான நோய் அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பரிசோதனைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் கடந்த 5ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
22 வயதுடைய குறித்த யுவதி விசேட பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டு, பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்ப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது வைத்திய பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி கொழும்பு தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணை இலங்கை மருத்துவர்கள் முற்றாகக் குணப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 Comments
No Comments Here ..