இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பொது இறந்த தங்களின் உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று உணர்புபூர்வமாக நினைவுகூரப்படுகின்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறுகின்றது.
முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.
உறவுகளை பறிகொடுத்த மக்களின் பங்குபற்றலுடனும் அவர்களின் அழுகையுடனும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது.
0 Comments
No Comments Here ..