25,May 2025 (Sun)
  
CH

அடுத்த ஆண்டு மே 24 இதே நாளில் அரசாங்கம் வீட்டிற்கு அனுப்பப்படும் - நளின் பண்டார

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்கு மேல் ஆட்சியில் இருக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர்களுக்கு இன்று கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் மீதான அதிருப்தி பொதுமக்களிடையே மட்டுமல்ல, அரசாங்க அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியிலும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


தொலைநோக்கு மற்றும் அனுபவம் இல்லாத ஒரு குழுவிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை எச்சரித்ததாகவும், தற்போது அதன் விளைவுகளை தாங்கள் காண்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.


அதன்போது மேலும் தெரிவித்த நளின் பண்டார, “இது வரலாற்றில் மிகக் குறைந்த முற்போக்கான அரசாங்கம். மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் தீர்வுகள் இல்லை, மேலும் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் இப்போது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.


இன்றைய திகதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த ஆண்டு மே 24 இதே நாளில் அரசாங்கம் வீட்டிற்கு அனுப்பப்படும், எங்களால் அல்ல, அதற்கு வாக்களித்த மக்களால்..” என தெரிவித்துள்ளார்.




அடுத்த ஆண்டு மே 24 இதே நாளில் அரசாங்கம் வீட்டிற்கு அனுப்பப்படும் - நளின் பண்டார

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு