07,Jun 2025 (Sat)
  
CH

முல்லைத்தீவு குமுழமுனை கேணியில் மூழ்கி இரு பாடசாலை மாணவிகள் பலி

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் மூழ்கி இரு மாணவிகள் உயிரிழந்துள்ளனர். மூவரும் கேணியில் இருந்தபோது இருவர் நீரில் இறங்கி இருக்க மற்றவர் புகைப்படம் எடுத்துள்ளார். 


திடீரென இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் அவர்களை காப்பாற்ற வெளியில் இருந்த மாணவி முயன்று அது பயனற்றுப் போக அருகில் இருந்தவர்களை அழைத்து அவர்களை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்த மாணவிகள் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் பத்தில் கல்வி கற்கின்ற பதினைந்து வயதுடைய ச.ரஸ்மிலா மற்றும் ர.கிருசிகா ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 


இவர்களின் உடல்கள் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொணடு வருகின்றனர்.




முல்லைத்தீவு குமுழமுனை கேணியில் மூழ்கி இரு பாடசாலை மாணவிகள் பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு