மன்னார், நடுக்குடா கடற்கரை பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படகுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இரு படகுகளில் இருந்தும் 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1,250 கிலோகிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன.
மேலும் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட பீடி இலை மூடைகள் கடற்படையின் உதவியுடன்,மன்னார் மதுவரி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களையும் கடற்படையினர் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..