18,Jun 2025 (Wed)
  
CH

இஸ்ரேல் பயணத்தைத் தவிர்க்குமாறு இலங்கை மக்களுக்கு தூதுவர் அறிவுறுத்தல்!

இஸ்திரேலில் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் மறு அறிவித்தல் வரை மீண்டும் இஸ்ரேலுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு பயணிக்கும் இலங்கையர்களுக்காக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


தற்போது இஸ்ரேலில் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.


அத்துடன் எவரேனுமொரு தரப்பினரால் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பாதுகாப்பு மறைவிடங்களை அண்மித்து தங்கியிருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அவசர நிலைமைகளில் இலங்கையர்கள் 24 மணித்தியாலமும் இயங்கும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் தூதரகத்துடன் அழைப்பை ஏற்படுத்தி தொடர்பு கொள்ள முடியுமெனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்தார்.




இஸ்ரேல் பயணத்தைத் தவிர்க்குமாறு இலங்கை மக்களுக்கு தூதுவர் அறிவுறுத்தல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு