கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தைத் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. மாநகர முதல்வராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
61 வாக்குகளைப் பெற்று வ்ராய் கெலி பல்தசார் வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ரிசா சரூக் 54 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மாநகர முதல்வர் வேட்பாளர்களாகத் தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலி பல்தசார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ரிசா சருக் ஆகியோர் போட்டியிட்டனர்.
0 Comments
No Comments Here ..