18,Jun 2025 (Wed)
  
CH

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு ஜூலை 23-ல் விசாரணைக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், எனபடும் பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தன்னைக் கைது செய்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொண்டுவந்துள்ள தீர்மானத்தால் தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பு வழங்கக் கோரி இந்த மனுவை பிள்ளையான் தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு இன்று (ஜூன் 17, 2025) எஸ். துரைராசா உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி மன்றாடியார், இந்த மனு தொடர்பான எதிர்ப்பை சமர்ப்பிக்க இரு வார கால அவகாசம் கோரியிருந்தார். இதனையடுத்து, குறித்த மனுவை ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.




பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு ஜூலை 23-ல் விசாரணைக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு