கோழிக்கோடு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் வேடன் பாடல் இணைப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண்ணின் மகனான வேடன், மலையாள கலைத்துறையில் பிரபலமான ராப் இசைப் பாடகராக உள்ளார். இவரது பாடல்கள் பெரும்பாலும் சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக அமைந்துள்ளன.
வேடனின் பாடல்களில் ஒன்றான 'பூமி ஞ்யான் வாழுன்ன இடம்' எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியில் இணைக்கப்படவுள்ளதாகச் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் வேடனின் பாடலை இணைப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கேரளாவின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..