15,Jul 2025 (Tue)
  
CH

செப்டம்பரில் நாடு முழுவதும் ஆன்லைன் அபராதம் செலுத்தும் வசதி அறிமுகம்

நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்துள்ளார்.


அபராதம் செலுத்துவது தொடர்பாக இன்று (ஜூலை 14) டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.


புதிய ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை குறித்த விவரங்களை வெளிப்படுத்திய அவர், இதன் முதல் கட்டம் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள காவல் நிலையங்களில் இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.




செப்டம்பரில் நாடு முழுவதும் ஆன்லைன் அபராதம் செலுத்தும் வசதி அறிமுகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு