மன்னார் பஜார் பகுதியில் இன்று 'சம உரிமைகளை வெல்வோம்; இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்' என்ற தொனிப்பொருளில் ஒரு சிறப்பு எதிர்ப்புப் பதாதையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டனர். இந்த முக்கியமான கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வை சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வின்போது, பொதுமக்கள் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்புப் பதாதையில் தங்கள் கையொப்பத்தைப் பதிவு செய்தனர். "காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு," "இன்னொரு அடக்குமுறைச் சட்டம் வேண்டாம்," "பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்," மற்றும் "அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் அமைப்பிற்காக போராடுவோம்" போன்ற கோரிக்கைகள் இதில் அடங்கும்.
இந்தக் கையொப்பம் சேகரிப்பு நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இலங்கையில் இனவாதத்திற்கு எதிராகவும், அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு அமைந்தது.
0 Comments
No Comments Here ..