16,Jul 2025 (Wed)
  
CH
WORLDNEWS

மகாத்மா காந்தி ஓவியம் ரூ. 1.7 கோடிக்கு ஏலம் போனது!

மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டபோது, பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் அவரை சந்தித்தார். அப்போது, காந்தி லெய்டனின் ஓவியத்திற்காக போஸ் கொடுத்தார்.


காந்தியின் வாழ்நாளில் ஓவியர் ஒருவருக்கு அவர் போஸ் கொடுத்த ஒரே நிகழ்வு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியம் முதன்முதலில் 1974-ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது.


தற்போது, அந்த அரிய ஓவியம் போன்ஹாம்ஸில் நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் 1.7 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.




மகாத்மா காந்தி ஓவியம் ரூ. 1.7 கோடிக்கு ஏலம் போனது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு