பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ஷாரூக் கபூர் எதிர்பாராத விதமாக தனது 23 வயதில் மெக்காவில் மரணம் அடைந்தார்.
ஷாரூக் கபூர் தனது தாய் சஜீலா கபூருடன் மெக்காவில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் கடுங் குளிர் மற்றும் உடல் பலகீனம் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் முன் அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் உடல் நடுக்கம் இருந்ததாகவும் அது வானிலை மாற்றத்தின் அறிகுறியாக இருக்கக் கூடும் என அவரது தாய் சஜீலா கருதியதாகவும் கூறப்படுகிறது.
பாதிப்பின் தீவிரத்தை அருகில் இருந்தவர்கள் அறியும் முன் அவர் திடீர் என மரணம் அடைந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷாரூக் படிப்பை முடித்த பின் அவரை நடிப்புத்துறையில் ஈடுபடுத்த ராஜ்கபூர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
0 Comments
No Comments Here ..