06,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை விரைவாக சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜெகத் குமார இளைஞர், யுவதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் பணிப்பிற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.அந்தவகையில், பொலிஸ் கொஸ்தாபல், பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஆகிய பதவி நிலைகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன இந்த நிலையில் குறித்த பதவிக்கு கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களை விண்ணப்பிக்குமாறு கோரி இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.அவர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

1800 தமிழ் பொலிஸ் அதிகாரிகளிற்கான வெற்றிடங்கள் காணபப்டுகின்றன. இப் பொலிஸ் ப யிற்சி காலத்தின் போது பயிற்சி பெற்று வரும் பொலிஸ் பயிலுனர்களுக்கான வேதனம் வழங்கப்படும். ஆனால் இதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக காணப்படுகிறது.

வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் 18 முதல் 28 வரை வயதெல்லை கொண்ட திருமணமாகாத இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களை பெற்று விரைவாக இப் பதவிகளுக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்டுகிறார்கள். இப்பதவி நிலைக்காக விண்ணப்பிப்போர் சாதாரண தரப்பரீட்சையில் இரண்டு தடவைகளிற்கு மேற்படாமல் தோற்றி கணிதம், தாய்மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.

ஆண்கள் 5 அடி 4 அங்குலத்திற்கு குறையாத உயரத்தினையும், மூ ச்சு வி ட்ட நி லையில் 30 அங்குலம் மார்பு சுற்றினையும் கொண்டிருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரிகள் 5 அடி 2 அங்குலத்திற்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும். குறைந்த உயரம் தொடர்பில் விண்ணப்பங்களை பொறுத்து பொலிஸ்மா அதிபரினால் முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவ் அவசர ஆட்சேர்ப்பு நியமனம் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும், நேர்முகத் தேர்வு குறித்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும் ஆட்சேர்ப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்த நிலையில் வடக்கில் காணப்படும் தமிழ் மொழி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும், பொலிஸ் சேவையை விரிவுபடுத்துவதற்குமான அவசர ஆட்சேர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும், அரச வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியும்மேலதிக தகவல்களையும்,விண்ணப்பபடிவங்களையும் கிளிநொச்சி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பலர் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் நிலையில் மிக குறைவான விண்ணப்பங்களே இதுவரை கிடைக்கபெற்றுள்ளது.பொலிஸ் சேவையில் இணைய விரும்பும் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மாவட்டத்திலும், மாகாணத்திலும் தற்போது காணப்படும் குற்ற செயல்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களிற்கான பாதுகாப்பு மற்றும் சேவைகளுடன் நாட்டின் சட்டத்தை பாதுகாக்கவும் நடைமுறைப்படுத்தவும் பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு